கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி விளக்கேற்றிய பா.ஜ.க.,வினர்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

கோவை: கோவில்களில் விளக்கேற்றக்கூடாது என்ற இந்து அறநிலையத்துறை உத்தரவைக் கண்டித்து கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி பா.ஜ.க.,வினர் விளக்கேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவில்களில் விளக்கேற்றக்கூடாது என்ற இந்து அறநிலையத்துறை உத்தரவைக் கண்டித்து கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி பா.ஜ.க.,வினர் விளக்கேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஆராய்ந்த விசாரணை கமிஷன், கோவில்களில் விளக்கேற்றவும், கற்பூரம் கொளுத்தவும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியது.

இதையடுத்து, கோவில்களில் விளக்கேற்றவும், கற்பூரங்கள் கொளுத்தவும் தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்த தடையை கண்டித்து தடை மீறி விளக்கேற்றும் போராட்டத்தில் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டனர். 

பிரதோஷ தினமான இன்று கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேசுவரர் ஆலயத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.,வினர் தடையை மீறி நெய் விளக்குகளை ஏற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்குகள் ஏற்றி வைக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து பா.ஜ.க.,வினர் அங்கு சென்று விளக்கேற்றினர்.



இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், "இந்துக்களின் நம்பிக்கையான விளக்கேற்றும் முறைக்கு தடை விதிக்கக் கூடாது. பாதுகாப்பு காரணமாக இருந்தால் விளக்கேற்ற தனி இடம் கோவில்களில் ஒதுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கோவில்களிலும் பா.ஜ.க.,வினர் நேரில் ஆய்வு நடத்துவார்கள். எந்த கோவிலிலாவது தடை விதிக்கப்பட்டால், தடை நீக்கம் தொடர்பாக தமிழக அரசுக்கு வலியுறுத்தப்படும். தடையை மீறியதற்காக காவல் துறையினர் வழக்குப் பதிந்தால் அதனை எதிர்கொள்ளத் தயார்." என்றார்.

பா.ஜ.க.,வினரின் இந்த திடீர் போராட்டத்தை அடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...