இண்டெக்ஸ் விவசாய கண்காட்சி கொடீசியாவில் 13-ம் தேதி தொடக்கம்

கோவை: கோவையில் நடைபெற உள்ள இண்டெக்ஸ் விவசாய கண்காட்சியில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த பால் பண்ணை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் நடைபெற உள்ள இண்டெக்ஸ் விவசாய கண்காட்சியில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த பால் பண்ணை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்கமான கொடீசியா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் இண்டெக்ஸ் என்ற பெயரிலான விவசாய தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டிற்கான 18-வது இண்டெக்ஸ் கண்காட்சி வருகிற 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கோவை கொடீசியா அரங்கில் நடைபெற உள்ளது. 

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு அச்சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, "விவசாய துறை பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் இக்கண்காட்சி சிறு, குறு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். 



இயந்திரம் சார்ந்த துறையாக விவசாய தொழிலை மாற்ற வேண்டிய தருணம் இது. இக்கண்காட்சியில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன." என்றார். 

கொடீசியா தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, "கடந்தாண்டு இக்கண்காட்சியில் 60 கோடி ரூபாய் அளவிற்கு நேரடி வர்த்தகமும், 100 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் விசாரணைகளும் வந்தது. இவ்வாண்டு 80 கோடி ரூபாய் அளவிற்கு நேரடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். இக்கண்காட்சி மூலம் விவசாயிகள் பலனடைவதோடு கோவை மாவட்டத்தில் உள்ள சிறு குறு தொழிற்சாலைகளும் தொழில் வாய்ப்புக்களை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...