அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் வாலிபர்

திருப்பூர்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தனசேகர் சாம்பியன் பட்டம் வென்றார்.


திருப்பூர்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் தனசேகர் சாம்பியன் பட்டம் வென்றார்.



திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகர் (21). தனது பள்ளி பருவம் முதலே பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த தனசேகர் அடிக்கடி உடற்பயிற்சி செய்து எப்பொழுதும் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வார்.

கல்லூரியில் நடந்த ஆணழகன் போட்டியில் தங்கம் வென்றார். பின்னர், பல்கலைக் கழகம் அளவில் நடைபெற்ற போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து மிஸ்டர். கோயம்புத்தூர் போட்டியில் பங்கேற்று ஓவர் ஆல் சாம்பியன் பட்டம் வென்றார். 

மீண்டும் மிஸ்டர்.தமிழ்நாடு, மிஸ்டர்.இந்தியா போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்ற தனசேகர் தனது வெற்றி மைல்கல்லில் மேலும் ஒரு மகுடமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் 'மிஸ்டர் மசில்-2018' போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 



ஜப்பான், கொரியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியா சார்பில் சென்ற ஒரே போட்டியாளர் தனசேகர். இவர் 22 வயதிற்குட்பட்ட பிசிக் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

உலக ஆணழகன் தனசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிங்கப்பூரில் வருகிற டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் போட்டியில் ஏசியன் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வேன்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...