குடியிருப்புகளை ஒதுக்கித்தர வேண்டி வாலாங்குளம் பகுதி மக்கள் மாநகராட்சியில் மனு

கோவை: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை உடனடியாக ஒதுக்கித் தர வேண்டி வாலாங்குளம் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.


கோவை: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை உடனடியாக ஒதுக்கித் தர வேண்டி வாலாங்குளம் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டு குலங்களில் ஒன்றான வாலாங்குளக் கரையை ஒட்டி இருந்த வீடுகளை அகற்றி, அங்கு வசித்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அம்மன்குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கிட உத்தரவிடப்பட்டது.



குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டாலும், 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று வரை வீடுகள் ஒதுக்கிடாமல், மாநகராட்சி நிர்வாகமும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் தங்களை அலைக்கழிப்பதாக அவர்கள் புகாரளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தருவதாக கூறி வீடுகளை இடித்து நான்கு வருடங்கள் ஆகியும் குடியிருப்பு ஒதுக்கப்படவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் குலுக்களில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ஏழு நாட்களில் வீடு ஒதுக்கப்படும் என்றும், அதற்கான தொகை ரூ.21,000 உடனடியாக கட்ட வேண்டும் என்றும் கூறிச்சென்றனர். 



அதனால், வட்டிக்கு கடன் வாங்கி இந்தத் தொகையை கட்டினோம். ஆனால், ஒன்பது மாதங்கள் முடிந்தும் இன்று வரை வீடு ஒதுக்கப்படவில்லை. வாடகை வீட்டில் வசிப்பதோடு, வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே மாநகராட்சி தலையிட்டு உடனடியாக குடியிருப்புகள் ஒதுக்கித் தரவேண்டும்." என்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...