திருப்பூரில் 11 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 47 புதிய பேருந்துகளில் முதற்கட்டமாக 11 பேருந்துகளின் சேவையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 47 புதிய பேருந்துகளில் முதற்கட்டமாக 11 பேருந்துகளின் சேவையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட புதிய பேருந்துகளின் தொடக்க விழா இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திற்கு  47 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக இன்று 11 பேருந்துகள் மட்டும் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது.



இந்த சேவையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் திருப்பூரில் இருந்து திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. மேலும், மூன்று பேருந்துகள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு இயக்கப்படுகிறது.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்." என்று தெரிவித்தார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...