வனப்பகுதிகளில் உள்ள அரசு ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் தடை

வனப்பகுதிகளில் இருக்கும் அரசுக்கு சொந்தமான வன ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

வனப்பகுதிகளில் இருக்கும் அரசுக்கு சொந்தமான வன ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அரசு பங்களாக்கள் மற்றும் வன ஓய்வறைகள் சட்டவிரோத செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரித்த நீதிபதிகள் மதன் பி. லோக்பூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் :- வனப்பகுதிகளில் உள்ள அரசு ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது. மேலும், வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிகளில் தங்கி, ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமே இதுபோன்ற ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பழைய திட்டங்கள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு வன ஓய்வறைகள் மற்றும் பங்களாக்களை உயர்த்திக் கட்டுவது போன்றவை உச்சநீதிமன்றம் அனுமதியுடன் செயல்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் இருக்கும் இந்த அறைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. மேலும், வனப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படவிருக்கும் வசதிகளை மத்திய அதிகாரக்குழு பராமரிக்கும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...