சமூக செயற்பாட்டாளர் வளர்மதிக்கு ஜாமீன்: அடக்குமுறை பெரிய போராட்டத்திற்கு வழிவகுக்கும் என பேச்சு

சேலம்: சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட சமூக செயற்பாட்டாளர் வளர்மதி 15 நாட்களுக்கு பின் அவர் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.

சேலம்: சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட சமூக செயற்பாட்டாளர் வளர்மதி 15 நாட்களுக்கு பின் அவர் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.

சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு நிலம் எடுத்துக்கொண்டிருக்கும்போது கடந்த 19-ம் தேதி ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களிடம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். பின்னர், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது,  ஊழியர்களை மிரட்டியது போன்ற வழக்குகள் அவர் மீது பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, 15 நாள்கள் கழித்து நேற்று வளர்மதி ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், : "ஆளும் அ.தி.மு.க., அரசு ஒட்டுமொத்தமாக அனைவரையும் காவல்துறையைக் கொண்டு மிரட்டி அச்சுறுத்தி மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கும் உரிமையை வழங்காமல் பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நான் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசியதில் என்ன குற்றம் இருக்கிறது. நிகழ்ச்சிகளில் கலந்து பேசியதற்கெல்லாம் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறார்கள். மத்திய அரசுக்கு அடிபணிந்து எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது. கைது செய்வதால் சாதித்து விடலாம் என்று நினைப்பது தவறு. இப்படி தொடர்ந்து அடக்குமுறையை ஏவினால் அது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும்.'' என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...