சென்னை: சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ,இதனிடையே, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் த.மா.க., சார்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி ராஜா, 'சென்னை-சேலம் 8 வழிச்சாலையின் நோக்கம் தெரியாமல் இந்தத் திட்டத்தை எதிர்க்கக் கூடாது. இந்த திட்டத்தால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, கிராமங்கள் பெரு நகரங்களுடன் இணைக்கப்படும். தொழிற்சாலைகள் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பயண நேரம் குறையும்.இந்த சாலை குறித்த நான் பலரிடம் கருத்து கேட்டதில் அனைவரும் பாராட்டினர். ஒருசிலர் மட்டும் இந்த சாலையை தரை மார்க்கமாக இல்லாமல் உயர்மட்டத்தில் அமைக்கலாம் என கருத்து தெரிவித்தனர். எனவே, 8 வழிச்சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்", இவ்வாறு அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ,இதனிடையே, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் த.மா.க., சார்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி ராஜா, 'சென்னை-சேலம் 8 வழிச்சாலையின் நோக்கம் தெரியாமல் இந்தத் திட்டத்தை எதிர்க்கக் கூடாது. இந்த திட்டத்தால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, கிராமங்கள் பெரு நகரங்களுடன் இணைக்கப்படும். தொழிற்சாலைகள் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பயண நேரம் குறையும்.இந்த சாலை குறித்த நான் பலரிடம் கருத்து கேட்டதில் அனைவரும் பாராட்டினர். ஒருசிலர் மட்டும் இந்த சாலையை தரை மார்க்கமாக இல்லாமல் உயர்மட்டத்தில் அமைக்கலாம் என கருத்து தெரிவித்தனர். எனவே, 8 வழிச்சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்", இவ்வாறு அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.