தொழில் நிறுவனங்கள் மானிய வசதிகளை பயன்படுத்த திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு

திருப்பூர்: தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.



திருப்பூர்: தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு தொழில் துறை நலிவடைந்துவிட்டதாக பல்வேறு தொழில் துறையினரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தொழில் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, "நலிவடைந்த தொழிலை மேம்படுத்தும் வகையில் சிறு குறு அல்லது பெரிய நிறுவனங்கள் இணைந்து குழுவாக மத்திய மற்றும் மாநில அரசுகளை அணுகும் போது, மத்திய அரசு 70 சதவீதம், மாநில அரசு 10 சதவீதம் என மொத்தம் 80 சதவிகித மானியம் அளிக்கின்றன.

அதற்கான முயற்சியினை திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் செய்து வருகிறது. மேலும், பருத்தி விலையேற்றம் என்பது பருத்தி கழகத்தின் தவறான ஏற்றுமதி கொள்கையால் ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்றுமதியினை கட்டுப்படுத்த வேண்டும்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...