'மதுவிலக்கு கொள்கையில் தமிழகம் பீகாரை பின்பற்ற வேண்டும்'

திருப்பூர்: மதுவிலக்கு கொள்கையில் தமிழகம் பீகாரை பின்பற்ற வேண்டும் என்று கள் இயக்கம் ஒருங்கினைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார்.

திருப்பூர்: மதுவிலக்கு கொள்கையில் தமிழகம் பீகாரை பின்பற்ற வேண்டும் என்று கள் இயக்கம் ஒருங்கினைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார். 

திருப்பூரில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது:-

பீகாரை பின்பற்றி தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். அங்கு ஆட்கடத்தல் 66.6% குறைந்துள்ளது, கொலை குற்றம் 23 சதவீதம் குறைந்துள்ளது, மக்களின் வாழ்க்கை தரம் கூடியுள்ளது. 

இதற்கு எல்லாம் முக்கிய காரணம் புரண மது விலக்கு கொள்கை தான்.

தமிழ்நாடு அரசு கள்ளுக்கு விதித்திருந்த தடையை நீக்கி விட்டது என்கிற குற்றசாட்டை எதிர்கட்சிகள், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக தெரிவித்தால் அதை தமிழ்நாடு கள் இயக்கம் முன்னின்று முறியடிக்கும்.

கள் போதை பொருள் அல்ல அது உணவு என்பதை நிலை நிறுத்தும், எடப்பாடி அரசுக்கு சவால் விடும் வகையில் வரும் ஜனவரி 21-ந் தேதி நான்கு முறையாக அசுவமேத யாகம் நடத்தப்படும். 

அந்த யாகத்தை அரசு தரப்போ, அரசியல் தரப்போ யார் தடுத்து நிறுத்தினாலும் விவாதம் நடத்தப்படும்.

அதில், கள் ஒரு போதை பொருள் என நிரூபிக்கப்பட்டால் கள் இயக்கம் கலைக்கப்படும்.

கடந்த கால கசப்பான நிகழ்வின் காரணமாக விவசாயிகள் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலங்கள் கொடுக்க முன்வரவில்லை.

குறிப்பாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை கொடுக்கவில்லை.

 ஏக்கர் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் இழப்பீடு கொடுத்துள்ளார்கள், 

பாதிப்பு இல்லாத விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார்கள்.

 இவ்வாறன முறை கேட்டினால் தான் இன்று நிலம் கொடுக்க மறுப்பதற்கு முதன்மை காரணமாக இருக்கின்றது.

திருப்பூர் அருகே காங்கேயம் பகுதியில் உள்ள இரும்பு தாது எடுக்கும் திட்டத்தில், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் எடுக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...