திருப்பூரில் சாய கழிவு நீரை நீர் நிலைகளில் கலந்துவிட்ட நிறுவனங்களுக்கு சீல்

திருப்பூர்: இந்தியாவிலேயே அன்னிய செலாவணி அதிகளவில் ஈட்டித்தருவதில் தன்னிகரற்ற மாவட்டமாக திகழ்வது திருப்பூர் மாவட்டம். இந்த பெருமையை பெற்ற திருப்பூரில் விவசாயம் என்பது கேள்வி குறியாக உள்ளது. காரணம் நீர் நிலைகளில் முறைகேடாக சாயக் கழிவு நீரினை கலந்து வரும் ஆலைகள் தான்.

திருப்பூர்: இந்தியாவிலேயே அன்னிய செலாவணி அதிகளவில் ஈட்டித்தருவதில் தன்னிகரற்ற மாவட்டமாக திகழ்வது திருப்பூர் மாவட்டம். இந்த பெருமையை பெற்ற திருப்பூரில் விவசாயம் என்பது கேள்வி குறியாக உள்ளது. காரணம் நீர் நிலைகளில் முறைகேடாக சாயக் கழிவு நீரினை கலந்து வரும் ஆலைகள் தான். 



திருப்பூரில் ஏராளமான சாய, சலவை ஆலைகள் இயங்கி வந்தாலும் அவற்றில் முறையான அனுமதி பெற்று இயங்கி வருவது மிகக் குறைந்தவையே. சிறிய அளவில் இயங்கி வரும் பட்டன், ஜிப் டையிங் மற்றும் பிரிண்டிங் பட்டறைகள் முறைகேடாக சாய தண்ணீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றன. இவற்றிற்கு சற்றும் சளைக்காமல் அனுமதி பெற்ற சாய ஆலைகளும் தண்ணீரை நீர்நிலைகளில் திருட்டுத்தனமாக கலந்து விடுகின்றன. 

அவ்வாறு வேட்டுவம்பாளையத்தில் சக்திவேல், திருநாவுக்கரசு என்பவர்களுக்கு சொந்தமான இரண்டு சலவை ஆலைகள் மணியன்காரம்பாளையம் பகுதியில் செயல்படும் சரவணன் என்பவருக்கு சொந்தமான கெம்டெக் நிறுவனத்திற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். 



இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறும் பொழுது, "கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, 2018-ம் ஆண்டு மே மாதம் வரை அனுமதி பெற்று முறைகேடாக சாய தண்ணீரை வெளியேற்றிய 24 சாய ஆலைகள் மீதும், அனுமதி பெறாமல் சாய நீர் வெளியேற்றி வந்த 110 ஆலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வருங்கால சந்ததியினரை வாழ வழியில்லாமல் செய்யும் இது போன்ற சாய ஆலைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருப்பூர் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...