சூயஸ் ஒப்பந்த தகவல்களை வெளியிட வேண்டி கோவையில் தர்ணா: முன்னாள் மாமன்ற உறுப்பினர் கைது

கோவை: மாநகர பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் திட்டத்திற்காக சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பத்மநாபன் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று தர்ணாவில் ஈடுபட்டார்.

கோவை: மாநகர பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் திட்டத்திற்காக சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பத்மநாபன் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று தர்ணாவில் ஈடுபட்டார்.



அப்போது செய்தியாளர்களிடம் பத்மநாபன் கூறுகையில், "இத்திட்டத்திற்காக கடந்த ஜனவரி மாதம் தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆறு மாதம் ஆகியும் மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

அந்த தனியார் நிறுவனம் மட்டுமே அவர்களது இணையதளத்தில் ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியிட்டனர். எனவே சுயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல், வேலைக்கான உத்தரவு நகல், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் ஆகியவற்றை உடனடியாக வெளியிடுமாறு மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், இன்று மாலை அல்லது நாளை ஒப்பந்த நகல் வெளியிடப்படும் என்று உதாசீனமாக பதில் கூறுகிறார்.

இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கை தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்." என்றார்.



இதனை தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் மாமன்ற உறுப்பினர் பத்மநாபனை உக்கடம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...