’ஜியோ ஜிகா ஃபைபர்’ என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் நிறுவனம்

மும்பை: ஜியோ ஜிகா ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற ஃபைபர் கேபிள் இணைப்புடன் கூடிய ப்ராட்பேண்ட் புதிய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

மும்பை: ஜியோ ஜிகா ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற ஃபைபர் கேபிள் இணைப்புடன் கூடிய ப்ராட்பேண்ட் புதிய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 41-வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில், அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது :-

நாட்டில் அதிகம் வரி செலுத்தும் தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் குழுமம் ஆகும். ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது, 215 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். ஜியோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இணைய பயன்பாடு 125 கோடி ஜி.பி.,யிலிருந்து 240 கோடி ஜி.பி.,யாக அதிகரித்துள்ளது, என்றார்.

இதைத் தொடர்ந்து, ஜியோ ஜிகா ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற ஃபைபர் கேபிள் இணைப்புடன் கூடிய ப்ராட்பேண்ட் புதிய சேவையை அம்பானி தொடங்கி வைத்தார். மேலும், ஜியோ போன் பாகம் 2-ஐயும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த சேவை குறித்து விளக்கி அம்பானி பேசினார். மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள 1,100 நகரங்களில் முதற்கட்டமாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும். ஃபைபர் இணைப்பு மூலம் வீடுகள், சிறு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ப்ராட்பேண்ட் வசதி ஏற்படுத்தித் தரப்படும். மேலும், இந்த ஃபைபர் இணைப்பின் மூலம் தொலைக்காட்சிகளில் இருந்தே வீடியோ கால்களை செய்யலாம். 

ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஜியோ ஃபோனில் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் சேவை கிடைக்கும். வாய்ஸ் கமண்ட் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோ ஃபைபர் சேவையைப் பெற ஜியோ இணையதளத்தில் பதிவு செய்யலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...