கோவை: பூமார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
கோவை: பூமார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
கோவை மாநகராட்சியின் 25-வது வார்டுக்குட்பட்ட பூமார்க்கெட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
அந்த வளாகம் முன்பு ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதாக தொடர் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில் குமார் ரத்தினம் தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்றினர்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த காரணத்தால் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சியின் 25-வது வார்டுக்குட்பட்ட பூமார்க்கெட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
அந்த வளாகம் முன்பு ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதாக தொடர் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில் குமார் ரத்தினம் தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்றினர்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த காரணத்தால் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.