பழுதடைந்து காணப்படும் அரசு தாவரவியல் பூங்காவின் அலங்கார நிழற்குடை : பராமரிக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

நீலகிரி: உதகையில் பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் பழுதடைந்து கிடக்கும்அலங்கார நிழற்குடையைப் பராமரிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: உதகையில் பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் பழுதடைந்து கிடக்கும் அலங்கார நிழற்குடையைப் பராமரிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுற்றுலா ஸ்தலங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். இங்கு உலகப் பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, அரசு ரோஜா பூங்கா, தொட்டப்பெட்டா மலை சிகரம், படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் போன்ற பல்வேறு சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா ஸ்தலங்களைக் காண ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், உலகப் பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள இத்தாலியன் பூங்காவிற்கு மேற்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அமரும் வகையில் உள்ள பார்வை மாடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அவ்வாறு மழை பெய்யும் நேரங்களில் பூங்காவில் அமைந்துள்ள இதுபோன்ற பார்வை மாடங்களிலும், பூங்காவில் அமைக்கப்பெற்றுள்ள நிழற்குடைகளில் சுற்றுலாப் பயணிகள் ஒதுங்குவர். 



கடந்த சில நாட்களாகப் பூங்காவில் அமைந்துள்ள இந்தப் பார்வையாளர் மாடம் பழுதடைந்தும், பராமரிப்பில்லாமலும் காணப்படுகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் பொதுமக்களும் உடனடியாக, இதனை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு தாவரவியல் பூங்காவிற்கு, உள்நாடு மட்டுமின்றி வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக வருகை புரிகின்றனர், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் வெளிநாட்டவரின் வருகை கணக்குப்பதிவு இங்கு மட்டும் பிரத்யேகமாக பதிவு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...