தொடங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்த தீபாவளி பண்டிகை ரயில்களுக்கான முன்பதிவு

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2-ம் தேதி இயக்கப்படும் ரயில்களின் முன்பதிவு, தொடங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்ததால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2-ம் தேதி இயக்கப்படும் ரயில்களின் முன்பதிவு, தொடங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்ததால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ரயில்களில், 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை மத்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், நவம்பர் 2-ம் தேதி ரயிலில் பயணம் செய்ய இன்றும், நவம்பர் 3-ல் பயணம் செய்ய நாளையும் முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்ள முறையே, வரும், 7 மற்றும் 8-ம் தேதிகளில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நவம்பர் 2-ம் தேதி செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவிற்காக தெற்கு ரயில்வே சார்பில் 250 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆன்லைன் மற்றும் நேரில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பாண்டியன், நெல்லை, மலைக்கோட்டை விரைவு ரயில்களுக்கான முன்பதிவு இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...