திருப்பூரில் தனியார் நூற்பாலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பூர்: திருப்பூர் அருகே வெள்ளகோவில் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

திருப்பூர்: திருப்பூர் அருகே வெள்ளகோவில் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.



திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் சாலையில் ஜெயவேல் என்பவருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் கழிவு பஞ்சுகளைப் பிரித்தெடுத்து நூலாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில், இன்று மதிய உணவு நேரத்தின் போது கழிவு பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் இருந்து புகை வருவதை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். எனினும் பஞ்சுகளில் பற்றிய தீயானது மளமளவெனப் பரவி கொழுந்து விட்டு எரிய துவங்கியது. இதனையடுத்து நூற்பாலையை விட்டு வெளியேறிய தொழிலாளர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.



இதனையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கழிவு பஞ்சுகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாயின. மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளகோவில் காவல் துறையினர், மின் கசிவு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...