விவசாயிகள் பாதிக்காத வகையில் 8 வழிச் சாலை திட்டத்திற்கு ஆவண செய்ய வேண்டும் : கோவையில் முரளிதரராவ் பேட்டி

கோவை: விவசாயிகள் வஞ்சிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் என பா.ஜ.க., தேசிய பொதுச்செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான முரளிதரராவ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: விவசாயிகள் வஞ்சிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் என பா.ஜ.க., தேசிய பொதுச்செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான முரளிதரராவ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.க.,விற்கு முக்கியமானது. அதுவும் தமிழகம் மிகவும் முக்கியமானது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுக்க தேசிய தலைவர் அமித்ஷா வருகின்ற 9-ம் தேதி சென்னையில் பா.ஜ.க., தலைவர்களை சந்திக்க உள்ளார். அப்போது, 11 ஆயிரம் பா.ஜக., பிரதிநிதிகளையும் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்க உள்ளார். தமிழுக்கு இந்த அரசு முன் உரிமை கொடுத்து வருகிறது. தமிழின் பெருமையை அடையாளப்படுத்தி, அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். 

ஜி.எஸ்.டி.,யில் மத்திய, மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாநில அரசு ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை கொண்டு வரும் பட்சத்தில், நிச்சயம் தீர்வு கிடைக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்தால் தான் செய்ய முடியும். தேர்தலில் கூட்டணி வைத்து கொள்வதற்கு பா.ஜ.க., திறந்த மனதுடன் இருக்கிறது. தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் நிலவுவதால், பா.ஜ.க., வளர்ச்சியடைய இது தான் சரியான தருண. தமிழகத்தில் பா.ஜ.க., தலைமையை மாற்றுவதற்கு எந்தவித தேவையும் இல்லை.

தொழில்துறையினர் பாதிக்காத வகையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைத்துத் துறைகளுக்கும் குறிப்பாக சிறு, குறு தொழில்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும், 8 வழிச் சாலை அமைக்கப்பட வேண்டும். அதற்காக விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது. விவசாயிகள் வஞ்சிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். திட்டங்களை செயல்படுத்தும் போது போராட்டம் நடைபெறும். அதனால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் புரிய வைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...