உதகையில் ஜே.சி.பி., இயந்திரத்தைத் திருடிய கொள்ளையன் புதுக்கோட்டையில் கைது

நீலகிரி : உதகையில் ரூ. 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜே.சி.பி. இயந்திரத்தை திருடிச் சென்ற திருடனை புதுக்கோட்டையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


நீலகிரி : உதகையில் ரூ. 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜே.சி.பி. இயந்திரத்தை திருடிச் சென்ற திருடனை புதுக்கோட்டையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

உதகை அருகே நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கட்டன். இவர் தனது மனைவி மங்களாவின் உதவியுடன் சுயஉதவிக்குழு மற்றும் வங்கியின் மூலமாக ரூ. 70 லட்சம் மதிப்புள்ள மாதத் தவணை முறையில் ஜே.சி.பி., இயந்திரத்தை வாங்கினார். மேலும், இந்த இயந்திரத்தை இயக்க மாத சம்பளத்திற்கு செல்வம் என்பவரை ஓட்டுநராகவும் பணிக்கு அமர்த்தினார். தற்போது, நீலகிரி மாவட்டத்தில் ஜே.சி.பி., ஆழ்துளை கிணறுகள், பறைகள் உடைக்க மாவட்டம் நிர்வாகம் கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. இதனால், போதிய வருமானம் இல்லாத நிலையில், ஓட்டுநர் செல்வனுக்கு மாத மாத சம்பளம் கொடுத்து வந்தார்.

இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜே.சி.பி., இயந்திரத்துடன் ஓட்டுநர் செல்வம் மாயமானார். பின்னர், இது தொடர்பாக, தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள எஸ்.பி., சண்முகப்பிரியாவிடம் நேரடியாகப் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு, ஜே.சி.பி.யுடன் மாயமான செல்வத்தை தேடி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, செல்வத்தின் செல்போன் சிக்னல் டவர் புதுக்கோட்டை ஆண்டிப்பட்டியைக் காட்டியதால், தனிப்படை போலீசார் ஆண்டிப்பட்டி கிராமத்திற்கு விரைந்தனர்.

அங்கு, ஜே.சி.பி., இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த செல்வத்தை கைது செய்து, ஜே.சி.பி., இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர், காந்தல் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட செல்வம், உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...