சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை வரும் 23-ம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்த இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை வரும் 23-ம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்த இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர் மனுவை வாபஸ் பெற்ற நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால், 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால், அவரை உச்சநீதிமன்றம் மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.
புதிய நீதிபதி சத்ய நாராயணன் இன்று மாலை 4 மணிக்கு விசாரணையை தொடங்கினார். முதலில் இருதரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வழக்கறிஞர்களின் கருத்தை கேட்டறிந்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார். 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார். இதனால், இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர் மனுவை வாபஸ் பெற்ற நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால், 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால், அவரை உச்சநீதிமன்றம் மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.
புதிய நீதிபதி சத்ய நாராயணன் இன்று மாலை 4 மணிக்கு விசாரணையை தொடங்கினார். முதலில் இருதரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வழக்கறிஞர்களின் கருத்தை கேட்டறிந்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார். 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார். இதனால், இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.