சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

திருப்பூர்: மலேசியால் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்று, சொந்த ஊர் திரும்பிய திருப்பூர் வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: மலேசியால் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்று, சொந்த ஊர் திரும்பிய திருப்பூர் வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 



திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் 'வி கராத்தே அகாடமி' என்ற பெயரில் கராத்தே பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்காப்பு பயிற்சியான கராத்தே கலை பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் உலக அளவிலான கராத்தே போட்டி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜப்பான், மலேசியா, தாய்லாந்து போன்ற 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருப்பூர் சொகுத்தா நீகோன் சொடோரிய அசோசியேஷன் மூலம் பங்கேற்ற அனுஸ்கா என்ற வீராங்கனை குமிட்டே பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல, சஷ்டி மற்றும் முகம்மது மாமூன் ஆகிய வீரர்களும் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். இந்நிலையில், பதக்கத்தை வென்று தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்குப் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாகமாக வரவேற்றனர். 

இதனிடையே, இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சென்று, தங்கப்பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி அளிப்பதாக மாணவி அனுஸ்கா கூறினார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...