திருப்பூர் தொழிலதிபருக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் : இருவர் கைது

திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலதிபரிடம் ரூ. 30 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலதிபரிடம் ரூ. 30 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

மங்கலம் அடுத்துள்ள சுல்தான்பேட்டை பகுதியில் லூர்து சேவியர் என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், லூர்து சேவியருக்கு இரு நாட்களுக்கு முன்பு மாலை 6 மணியளவில், அவருடைய செல்போனிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ரூ. 30 லட்சம் பணம் உடனடியாக கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், பனியன் நிறுவனத்தில் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்தும் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லூர்து சேவியர், கொலை மிரட்டல் தொடர்பாக திருப்பூர் மத்திய போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை மிரட்டல் விடுத்தது லூர்து சேவியரின் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பார்த்தசாரதி மற்றும் தற்போதைய ஊழியர் வசந்த் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...