சார்ஜாவில் இருந்து கோவைக்கு தங்க கட்டிகள் கடத்த முயற்சி : 3.6 கிலோ தங்கம் பறிமுதல்

கோவை: சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு 3.6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த பயணியை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.


கோவை: சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு 3.6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த பயணியை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் இருந்து வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது எர்ணாகுளத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற பயணி கொண்டு வந்த உருளை வடிவ உலோகம் ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட அந்த உலோகத்தை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அமல்ராஜை கைது செய்தனர். 

இந்நிலையில், அந்த உருளையை ஆய்வு செய்த போது, அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்திவரப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அமல்ராஜை கைது செய்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று அமல்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் எனவும், அது 3.6 கிலோ எடையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...