கோவையில் குட்கா குடோனுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை உடைக்க முயன்றவர்கள் கைது

கோவை: பொன்னையராஜபுரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட குடோன் உரிமையாளர் மற்றும் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொன்னையராஜபுரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட குடோன் உரிமையாளர் மற்றும் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

அரசின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே ராஜவீதி, டவுன்ஹால், காந்திபார்க் போன்ற பகுதிகளில் உள்ள குடோன்களில் மற்றும் பெரிய கடைகளில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், பொன்னையராஜபுரம் பகுதியில் கடந்த 2-ம் தேதி குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் குடோனை சோதனை செய்தனர். அப்போது இரண்டு டன் குட்கா பொருட்கள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட குடோனை உடைத்து குட்கா பொருட்களை எடுத்து செல்ல முயன்றதாக குடோன் உரிமையாளர் அசோக் மற்றும் அவரது கூட்டாளிகள் காசிவிசுவநாதன், சலீம், அஸ்ரப், சுரேஷ் மற்றும் பாபு ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...