பொறியியல் பணிகளுக்காக கன்னூர் - மாஹி இடையிலான ரயில் போக்குவரத்தில் மாற்றம்

கோவை: இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் பணிகள் காரணமாக கன்னூர் - மாஹி இடையே வரும் 02-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளைத் தவிர பிற நாட்களில் இயக்கப்படும் ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் பணிகள் காரணமாக கன்னூர்  - மாஹி இடையே வரும் 02-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளைத் தவிர பிற நாட்களில் இயக்கப்படும் ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதாவது, ரயில் எண் : 56323 கோவை - மங்களூரூ ரயில்நிலையம் அதிவிரைவு பயணிகள் ரயிலின் சேவை சொர்ணூர் மற்றும் கன்னூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, ரயில் எண் : 56324 மங்களூரூ ரயில்நிலையம் - கோவை அதிவிரைவு பயணிகள் ரயிலின் சேவை, கன்னூர் மற்றும் சொர்ணூர் இடையே ரத்து செய்யப்படுகிறது 2-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை (ஞாயிறு, புதன் தவிர) 20 நாட்களுக்கு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மாவெல்லிப்பாளையம் - மகுடன்சாவடி இடையே பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், 4-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை ரயில் எண் :22609 மங்களூரூ - கோவை ரயில் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக கோவை ரயில்நிலையம் வந்தடையும். ரயில் எண் : 07115 ஐதராபாத் - கொச்சிவெலி வாராந்திர சிறப்பு ரயில் ஞயிற்றுக்கிழமைகளில் மட்டும் (08, 15, 22, 29, ஆகஸ்ட் 05) 30 நிமிடம் சேலத்தில் நிறுத்தப்படும். செவ்வாய்க்கிழமைகளில் சேலம் வந்தடையும் பிலாஷபூர்-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேலத்தில் 10, 17, 24, 31 மற்றும் ஆகஸ்ட் 07 ஆகிய தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதேபோல, ரயில் எண் : 66602/66603 கோவை - சேலம் - கோவை ரயிலின் சேவை வரும் 04-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை 38 நாட்களுக்கு ஈரோடு-சேலம்-ஈரோடு இடையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...