கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை, தொடர்ந்து 7 முறைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.
கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை, தொடர்ந்து 7 முறைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.

பச்சிளம் குழந்தைகளுக்கு செய்யப்படும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரத்தக் குழாய் மாற்று அறுவை சிகிச்சை, மிகவும் சிக்கலானது. இந்த சிகிச்சையானது, குழந்தைகளின் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய் இடம் மாறி இருந்தால் மேற்கொள்ளப்படுகிறது. இருதயத்தின் வலது அறையிலிருந்து வரும் ரத்தக் குழாய் மற்றும் நுரையீரலில் இருந்து வரும் இடது ரத்தக்குழாய் இடம் மாறி இருக்கும்.
சாதாரணமாக, குழந்தைகளுக்கு இருதயத்தின் இடது அறையிலிருந்து வரும் ரத்தக்குழாய், வலது நுரையீரல் உடன் இணைந்திருக்கும். இந்த மாறுபட்ட குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் உயிர் வாழ்வது கடினம். பிறந்த சிசுவுக்கு இந்த ரத்த குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவனைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்த நிலையில், தென்னிந்திய அளவில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை தான் முதல் முறையாக குழந்தைகளுக்கான இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில் இது போன்று 7 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில், பெரும்பாலான குழந்தைகள் பிறந்து 20 நாட்களுக்கு குறைவாகவும், 3 கிலோ எடைக்கும் குறைவாகவே இருந்தனர். கோவையில் முதல் முறையாக வெற்றிகரமாக பல குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.