அண்ணா தொழிற்சங்க பதவியில் இருந்து வேண்டுமென்றே நீக்கம்: முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி குற்றச்சாட்டு

கோவை: அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கப் பொதுச்செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி. இவர், கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அண்ணா தொழிற்சங்க சட்டவிதிகளின்படி தனக்கு முறையாக எந்தவிதமான விளக்கமும் அறிக்கைகள் வழங்கவில்லை. என்னை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். மேலும், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனில், முறையாக சம்மன் அனுப்பி விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யாமல் விடுவித்துள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டுதான் ஆகஸ்ட் மாதம் மீண்டும் அதே பதவியில் என்னைப் பணியமர்த்தினார். ஆனால், இவர்கள் நான் உறுப்பினராக இல்லை என்று கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு தொழிற்சங்க உறுப்பினர் அல்லாத ஒருவர், எப்படி அந்தப் பதவியில் இருக்க முடியும். அதனால், இவர்கள் கூறுவது முற்றிலும் தவறு. மேலும், கடந்த முறை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, நான் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு ரூ. 4,000 வாங்கிக் கொண்டிருந்தவர்களை ரூ. 12,000 வரை உயர்த்தினேன். எனவே, தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் என்னுடன் தான் உள்ளனர்.

மேலும், நான் தொழிற்சங்க வங்கி கணக்கில் ரூ. 12 மற்றும் ரூ. 18 கோடி வரை சேர்த்து வைத்துள்ளேன். இவர்களால், தொழிற்சங்கத்தை நடத்த முடியாது. எனவே, எண்ணெய் வேண்டுமென்றே அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். நான் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், அந்தப் பொறுப்பிற்கு மற்றவர்களை இவர்களால் நியமிக்க முடியாது. எனவேதான், இவர்கள் ஒரு குழு அமைத்து உள்ளனர். நிச்சயமாக அந்த வழக்கு எனக்கு சாதகமாக வரும். தொழிற்சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் என் பக்கம் தான் உள்ளனர். 

தற்போது, டி.டி.வி., தினகரன் அணியில் எனக்கு மீண்டும் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அதற்கு, டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...