தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: அரசு பணிகள் பாதிப்பு

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. 

பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதித்தை ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்குதல், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திடுதல், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுதல் உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை மாவட்டத்தில் 228 கிராம பஞ்சாயத்துக்கள், 12 பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.



இதனால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் முத்துராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...