கோவை மண்டலத்திற்கு வருகின்றன 250 புதிய பேருந்துகள்

கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் 515 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் 515 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், கோவை மண்டலத்திற்கு 250 புதிய மப்சல் (mufsal) பேருந்துகள் வரவுள்ளன. இது குறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த 250 பேருந்துகளில் 75 கோவை மாவட்டத்திற்கும், 25 நீலகிரி மாவட்டத்திற்கும், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு 150 பேருந்துகளும் வருகின்றன வரவுள்ளன. இவை அனைத்தும் மப்சல் பேருந்துகள்.

வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகளில் குளிர்சாதன வசதி மற்றும் படுக்கை வசதியுடனான பேருந்துகள் அடுத்த கட்டமாக கோவை மண்டலத்திற்கு வரவுள்ளன." என்றார்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 515 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

அதில், சேலம் மாவட்டத்திற்கு 78, விழுப்புரம் மாவட்டத்திற்கு 60, மதுரை மாவட்டத்திற்கு 32, திருநெல்வேலி மாவட்டத்திற்கு  69, மற்றும் கும்பகோணத்திற்கு 64 புதிய பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 40 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.   

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...