திருப்பூரில் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் திட்டம் - 150 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் திட்டத்திற்கு 150 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் திட்டத்திற்கு 150 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் உள்ள திருமண்கரடு மற்றும் பூசாரிவலசு, வெள்ளக்கோவில் பகுதிகளில் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இரும்புத்தாது இருப்பது குறித்து மத்திய அரசு நிறுவனமான KIOCL நிறுவனம் ஆய்வு நடத்திவருகிறது. இதன் காரணமாக தங்களின் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வாழ்வாதாரம் பறிபோகும் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரும்புத்தாது சுரங்க பணிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை முதல் வெள்ளகோவில் அருகே உள்ள வள்ளியரச்சல் பகுதி வரை அதிகப்படியான இரும்புத்தாது இருப்பதாக அரசு ஆவணங்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தகவல்களின் மூலம் உறுதிப்படுத்திய தேசிய கனிம வள ஆய்வு நிறுவனம் (NMET),இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க குதிரேமூக் நிறுவனத்துக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. 

ஆய்வில் இரும்புத்தாது இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் மத்திய அரசின் இரும்புத்தாது அகழ்ந்தெடுக்கும்    சுரங்க நிறுவனமான KIOCL(KUDREMUKH IRON ORE LTD) க்கு இரும்புத்தாது இருப்பதை உறுதி செய்ய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மாதிரிகள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வு மற்றும் தரைமேல் உள்ள மாதிரிகளை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை கடந்த மாதம் முதல் கேஐஓசிஎல் நிறுவன அதிகாரிகள் ஓலப்பாளையம்,பூசாரி வலசு, திருமண்கரடு,வெள்ளகோவில்,காங்கேயம்  உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், இப்பகுதியில் இரும்புத்தாதின் செறிவை கணக்கீடு செய்ய 3000 அடி ஆழத்துக்கு ஆழ்துளை சோதனை குழிகள் அமைக்க இருப்பதாகவும் KIOCL நிறுவன அதிகாரிகள் பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதன் காரணமாக இப்பகுதியில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதுடன் 2 லட்சம் பேரின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என கருதுவதால் இப்பகுதியை சேர்ந்த 150 கிராம மக்கள் இரும்புத்தாது குறித்த ஆய்வுக்கும், சுரங்கப்பணிகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இரும்பு தாது சுரங்க பணிகளை கைவிடக்கோரி சுமார் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியை சேலத்தில் சந்தித்து மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...