திருப்பூரில் முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 4 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 4 பேரைக் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து வேட்டைக்குப் பயன்படுத்த முயன்ற வலைகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 4 பேரைக் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து வேட்டைக்குப் பயன்படுத்த முயன்ற வலைகளை பறிமுதல் செய்தனர். 

பல்லடத்தை அடுத்த கரடிவாவி பகுதியில் முயல் வேட்டை நடைபெறுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 4 பேரும் கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.



கூலி வேலை செய்து வரும் ரவிக்குமார், ஈஸ்வரன், சுப்பிரமணியம், ராஜேந்திரேன் ஆகியோர் வேலை இல்லாத நேரங்களில் முயல்வேட்டையில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களுக்கு அபராதத்தை விதித்த வனத்துறையினர், வேட்டைக்குப் பயன்படுத்திய வலைகள், கயிறு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...