துடும்பு, பறை இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரி போராட்டம்

கோவை : துடும்பு, பறை உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரி, கோவையில் இசைக் கருவிகளை இசைத்து சமூக நீதிக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

கோவை : துடும்பு, பறை உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரி, கோவையில் இசைக் கருவிகளை இசைத்து சமூக நீதிக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.



சிவானந்தா காலனி பகுதியில் சமூக நீதிக்கட்சியின் சார்பில் துடும்பு, பறை, கொம்பு, மோளம் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது, துடும்பு, இசை உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைத்தும், நடனமாடியும் போராட்டம் நடத்தினர். கடந்த 10 ஆண்டுகளாக இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதில்லை. கர்நாடகா இசை கலைஞர்கள் மற்றும் திரையுலகினர்களுக்கு வழங்கப்படுவது போல துடும்பு, பறை இசை கலைஞர்களுக்கும் விருது வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.



மேலும், இசை கலைஞர்களுக்கு விருது வழங்க தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இல்லையெனில் தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுமென்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...