அரசு வழங்கிய இடத்தில் வீடுகட்ட இடையூறு: நீலகிரி ஆட்சியரிடம் ஆதிவாசி இனமக்கள் மனு

நீலகிரி: கூடலூர் தொரப்பள்ளி பகுதியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வீடு கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் ஆதிவாசி இனமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

நீலகிரி: கூடலூர் தொரப்பள்ளி பகுதியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வீடு கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் ஆதிவாசி இனமக்கள் மனு கொடுத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தொரப்பள்ளி பகுதியில் ஆதிவாசி காட்டுநாயக்கன் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 11.04.2018 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்களுக்கான நலத்திட்டத்தின் கீழ் 300.8 சதுரஅடி பரப்பளவில் வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 

இந்தச் சான்றின் அடிப்படையில் மேற்படி இடத்தைக் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்த பின், நேற்று வீடு கட்டுவதற்கான அஸ்திவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அப்போது, தனியார் எஸ்டேட் ஊழியர்கள், தங்களது முதலாளியிடம் கேட்காமல் எந்த வேலையும் செய்ய கூடாது எனக் கூறி, 2 காவலர்களுடன் வந்து வீடு கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். மீறி வீடு கட்டினால் ஜே.சி.பி. இயந்திரத்தை வைத்து வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிவிடுவோம் என்று கூறியுள்ளனர். 

மேலும், அஸ்திவாரத்திற்காக தோண்டிய குழிகளை மூடி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். எனவே, அரசு வழங்கிய இடத்தில் வீடுகட்ட இடையூறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிவாசி இனமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்று அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...