மதுபானக்கூட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய மதுபானக்கூட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கக் கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய மதுபானக்கூட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கக் கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வீரகேளம் நாகராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள கடை எண்:1645 துணை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய மதுபானக் கடை உரிமையாளர் மற்றும் அடியாட்களை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:- மதுபானக்கூட உரிமம் பெற்ற பழம்பதி என்பவர் இந்த மதுபானக் கூடத்தை சுப்ரமணி என்பவருக்கு உள் வாடைக்கு விட்டுள்ளார். கடையை நடத்தி வரும் சுப்ரமணி சட்டத்திற்கு புறம்பாக இரவு, பகல் பாராமல் மது வியாபாரம் செய்வது மட்டுமல்லாமல், இதனைத் தட்டிக் கேட்கும் டாஸ்மாக் ஊழியர்களை அடியாட்கள் மூலம் தாக்குகின்றனர்.

கடந்த மாதம் 30-ம் தேதியன்று துணை விற்பனையாளர் மீது பழம்பதியின் சகோதரர் தாக்குதல் நடத்தியதில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கடையின் துணை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும். மதுபானக்கூட உரிமதாரரின் காப்புத் தொகையை பறிமுதல் செய்வதுடன், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...