குளங்களை தூய்மைப்படுத்துகிறோம்; சரியான உபரணங்கள் மட்டும் கொடுங்க..! - கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை: ராஜ வாய்க்கால் மீதான பாலத்தின் கீழ் இருந்த கழிவுகளை கைகளாலே அகற்றி சேவை புரிந்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள்.


கோவை: ராஜ வாய்க்கால் மீதான பாலத்தின் கீழ் இருந்த கழிவுகளை கைகளாலே அகற்றி சேவை புரிந்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள்.

6.5 கிலோ மீட்டர் நீளமுடைய ராஜ வாய்க்கால் மீது மாநகர பகுதிகளில் 8-க்கு மேற்பட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அமைந்துள்ள பாலங்களில் கீழ் சகதிகளும், குப்பைகளும் தேங்கி நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளன.

இதனை தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகமும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பணி நடைபெற்று வருகிறது.

தூய்மைப் பணி

கோவை - பாலக்காடு சாலை மார்க்கமாக பயணிக்கும் ராஜ வாய்க்கால் மீது அமைந்துள்ள பாலத்தில் நேற்று தூய்மைப் பணி நடைபெற்றது. இந்த பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த 70-க்கு மேற்பட்டோர் ஈடுபட்டனர்.



மூக்கைப்பிடிக்க வைக்கும் துர்நாற்றத்தையும் பொருட்படுத்தாது அந்த தன்னார்வலர்கள் செய்த பணி பாராட்டத்தக்க வகையில் அமைந்தது.

இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது:-  எங்கள் அமைப்பு வாரந்தோறும் இவ்வாறான களப்பணியை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறே, ராஜ வாய்க்கால் மீது அமைந்துள்ள பாலங்களில் கீழ் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இது போன்ற கழிவுகளை மனிதர்களை கொண்டு அகற்றக்கூடாது என்ற சட்டம் உள்ளதால், கழிவுகளை முழுமையாக அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



உபகரணங்கள்

தொழில் நகரமாக உள்ள கோவையில், பல்வேறு தொழிற்சாலைகளும், தொழில்நுட்ப கல்லூரிகளும் அமைந்துள்ளன. அவர்களும், அரசும் முன்வந்து, கழிவுகளை அகற்ற ஒரு இயந்திரம் மற்றும் சரியான உபகரணங்கள் தயாரித்து கொடுக்க வேண்டும்.

இயந்திரங்கள் மட்டும் கிடைத்தால் எங்கள் அமைப்பினரே கழிவுகளை அகற்றிடுவோம். இந்த பணியில் தன்னார்வலர்கள் யாரும் முகம் சுழிப்பதில்லை. எனவே தொழில் துறையினர் மற்றும் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று இயந்திரம் தயாரித்துக் கொடுக்க முன்வர வேண்டும்.



இவ்வாறு அவர் கூறினார்.

தரமான சமுதாயத்தை உருவாக்கும் பணி அரசின் பணி மட்டுமல்ல என்பதை உணர்ந்து செயலாற்றும் இவர்கள் போன்ற சேவகர்கள் நாட்டிற்கு இன்னும் தேவைப்படுகிறார்கள். தற்போது அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றித்தர சமூக அக்கறை கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...