என்ஜின் கோளாறால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதியில் நிறுத்தம்: காரின் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்

நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் காட்டேரி பகுதியில் நின்றது. பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பப்பட்டனர்.



நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் காட்டேரி பகுதியில் நின்றது. பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பப்பட்டனர்.

நீலகிரி மலை ரயில் தினமும் மதியம் 3.30 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும். இந்நிலையில், நேற்று மதியம் குன்னூரிலிருந்து புறப்பட்ட மலை ரயில் காட்டேரி பகுதிக்கு அருகே சென்ற போது, அங்குள்ள பாலத்தில் என்ஜின் பழுதாகி நின்றது.

உடனடியகாக ரயில்வே ஊழியர்கள் குன்னூரிலிருந்து வரவழைக்கப்பட்டனர். ஆனால், பழுதை சரி செய்ய கால தாமதமானதால், ரயில்வே நிர்வாகம் உடனடியாக பேருந்துகளை ஏற்பாடு செய்தது. இதனால், ரயிலில் பயணித்த 165 பயணிகள் ரயிலிலிருந்து இறக்கப்பட்டு மூன்று பேருந்துகளில் மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரயிலில் பயணித்த ஒரு கர்ப்பிணி பயணிக்கு கார் ஏற்பாடு செய்யப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பப்பட்டார். மேலும், தற்காலிகமாக பழுது சரி செய்யப்பட்டு, அந்த ரயில் இரவு 7 மணியளவில் காட்டேரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டது.

தற்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...