கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தியவர் உயிரிழப்பு: தலைமை நீதிபதி வருத்தம்

கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவரது மரணம் வருத்தமளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவரது மரணம் வருத்தமளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

நீதிபதி பிரபா ஸ்ரீ தேவன் எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கலந்து கொண்டார். 



அப்போது அவர் பேசுகையில், "கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய மகேந்திரன் (35) என்பவர் உயிரிழந்ததை செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்தேன். தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், சுத்தப்படுத்த தேவையான தக்க உபகரணங்களும் அவருக்கு வழங்கப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது. 

கழிவு நீரை மனிதர்கள் சுத்தப்படுத்த கூடாது என்பது சட்டமாக உள்ளது. ஒரு சில பணிகளைத் தவிர மற்ற விதமாக இந்த பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கமுடியும்.

கோவையில் மகேந்திரன் உயிரிழப்பு தொடர்பாக அவருக்கு தக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை உபயோகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதா?" போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...