நிரம்பியது சோலையாறு அணை : நிரம்பி வருகின்றன கோவை மாவட்ட அணைகள்

கோவை: வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்பியதைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை: வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்பியதைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன. சோலையார் அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. இந்த அணையில் தற்போது 130.51 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 3957.29 கன அடியாக உள்ளது. 



அணையில் இருந்து 1014.81 கன அடி விடுவிக்கப்பட்டு பைபாஸ் வழியாகவும், சேடல் வழியாக 29.28 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது.

ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விரைவில் முழுவதுமாக நிரம்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுவாணி அணையைப் பொறுத்தவரையில் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அணைகள் நிரம்பியுள்ள காரணத்தால் மேற்குமண்டலத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேவைக்கு அதிகமான நீர் இருப்பதால், இந்த ஆண்டு கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...