கோவையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த கும்பல் கைது

கோவை: தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை குறிச்சி பகுதியில் விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை குறிச்சி பகுதியில் விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறிச்சி, போத்தனூர் போன்ற பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போத்தனூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கடையில் வைத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக சஞ்சய் காந்தி, சிவ சந்திரன், விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதில் கைதான மூன்று பேரிடமிருந்தும் ஒட்டுமொத்தமாக ரூ.20 லட்சம், நான்கு லேப்டாப்கள் மற்றும் ஐந்து செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...