ஹார்டுவேர் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையனை மடக்கிப் பிடித்த கோவை போலீசார்

கோவை: சுக்ரவார்பேட்டை மில் சாலையில் உள்ள மகாதேவ் ஹார்டுவேர்ஸில் கொள்ளையடித்த நபரை ரயில் நிலையம் முன்பு வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: சுக்ரவார்பேட்டை மில் சாலையில் உள்ள மகாதேவ் ஹார்டுவேர்ஸில் கொள்ளையடித்த நபரை ரயில் நிலையம் முன்பு வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மரக்கடை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேவாராம் என்பவருக்கு சொந்தமான மகாதேவ் ஹார்டுவேர் என்ற கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தநிலையில், ஹார்டுவேர் கடையில் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) பெருமாள் முன்னிலையில் உதவி ஆணையர் (குற்றப்பிரிவு) சோமசுந்தரம் தலைமையில் ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் அவர்களது குழுவினர் இணைந்து சந்தேகிக்கப்பட்ட ஹிம்தாரம் என்பவரை தேடி வந்தனர். 



இந்த நிலையில், சந்தேகிக்கப்பட்ட ஹிம்தாரம் என்பவரை நேற்று கோவை ரயில் நிலையம் முன்பு வைத்து போலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து களவுபோன ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...