உதகையில் கொட்டித் தீர்த்த கனமழை: போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி

நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்களை இயக்க பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்களை இயக்க பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் தீவிர மழைப் பொழிவைப் பெறும். இந்தாண்டு குறித்த நேரத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மலை தோட்ட காய்கறிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணி முதல் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 3 மணி நேரமாக நீடித்த கனமழையால் உதகை நகரின் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...