உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களை அ.தி.மு.க., அரசால் எதிர்கொள்ள முடியாது: கோவையில் செந்தில் பாலாஜி கணிப்பு

கோவை: உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாது, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க., அரசால் எதிர்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை: உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாது, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க., அரசால் எதிர்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். 

கோவை கொடிசியாவில் அ.ம.மு.க சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அ.ம.மு.க., நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது :- ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இந்த அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆனால், மத்திய அரசின் அழுத்தம் காரணமாக சென்னை - சேலம் இடையே எட்டு வழி சாலை அமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு பெற்றுத் தரவும், அங்கு மலைகளில் உள்ள கனிமங்களை எடுக்கவுமே முதலமைச்சர் ஆர்வம் காட்டி வருகிறார். 

கோவையில் குடிநீர் விநியோகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பது தவறானது. தனியார் நிறுவனங்களிடம் சன்மானப் பெட்டியை பெற்றுக் கொண்டு, தமிழகத்தையே இந்த அரசு எழுதிக் கொடுத்துவிடும். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, நாடாளுமன்ற தேர்தலையும் சட்டமன்ற தேர்தலையும் அ.தி.மு.க., அரசால் எதிர்கொள்ள முடியாது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு தி.மு.க.,வை காரணம் காட்டுவது தவறானது. உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்தத் தடையும் இல்லை. மேலும், உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பட்சத்தில் அ.ம.மு.க., வெற்றி பெறும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...