'வண்டியை நிறுத்தவும் வழியில்லை, வாழவும் வழியில்லை': கோவை விமான நிலைய நிறுத்த விதிமுறைகளால் கால் டாக்சி ஓட்டுநர்கள் கவலை

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் வாடிக்கையாளர்களை 2 நிமிடத்திற்குள் ஏற்றிக் கொண்டு செல்லாத தனியார் கால் டாக்சிகளுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுவதால் ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் வாடிக்கையாளர்களை 2 நிமிடத்திற்குள் ஏற்றிக் கொண்டு செல்லாத தனியார் கால் டாக்சிகளுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுவதால் ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 



கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில், பெரும்பாலான பயணிகள் விமான நிலையம் செல்லவும், அங்கிருந்து மற்ற இடங்களுக்குச் செல்லவும் இணையதளம் மூலம் தனியார் கால் டாக்சிகளை புக்கிங் செய்து பயன்படுத்தி வருகின்றனர். 



இதனிடையே, வாடிக்கையாளர்களை விமான நிலையத்தில் இறக்கிவிடவும், ஏற்றிச்செல்லவும் தனியார் கால் டாக்சிகளுக்கு குறிப்பிட்ட நிமிடங்கள் வரை கட்டணம் வசூல் செய்யாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின், விமான நிலைய கால் டாக்சி ஸ்டாண்டு ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாகக் கூறியதையடுத்து, தனியார் கால் டாக்சிகள் தங்கள் வாடிக்கையாளர்களை விமான நிலையத்திலிருந்து ஏற்றிச் செல்ல தேசியக் கொடி பறக்கும் இடம் அருகே அனுமதிக்கப்பட்டது.



இதனிடையே, 2 நிமிடங்களுக்குள் தங்கள் வாடிக்கையாளர்களை தனியார் கால் டாக்சிகள் ஏற்றிச்செல்லவில்லை எனில், ரூ. 200 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது என்கிற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

இது குறித்து தனியார் கால் டாக்சி ஒட்டுநனர் மோசஸ் கூறுகையில், "வாடிக்கையாளர்கள் விமான நிலையம் வந்து சேரும் முன் கால் டாக்சிகளை புக்கிங் செய்து விடுகின்றனர். அதன்பின், விமான நிலையம் முகப்பிலிருந்து அவர்கள் தேசிய கொடி கம்பம் அருகே 600 மீட்டர் தூரம் நடந்து வர வேண்டும். இதற்கு குறைந்தது 5 நிமிடங்களாவது ஆகும். அப்படியிருக்க 2 நிமிடங்களில் எவ்வாறு அவர்களை ஏற்றிச் செல்லமுடியும். அதேசமயம், விமான நிலையம் வெளியே வாடிக்கையாளர்கள் வரும் வரை காத்திருக்கலாம் என்றால் காவல்துறையினர் அதற்கு அனுமதிப்பதில்லை. பார்க்கிங் லாக் போட்டு ரூ. 200 அபராதம் வசூல் செய்கின்றனர். 



மேலும், வாடிக்கையாளர்களிடமே பார்க்கிங் கட்டணம் கேட்டால் வாக்குவாதம் வருகிறது. இதனால், வண்டியை நிறுத்தவும் இடமில்லாமல் வாடிக்கையாளர்களை இழந்து, ஒவ்வொரு முறையும் எங்கள் வருவாயிலிருந்து பணம் கட்டி வாழவும் வழியில்லாமல் உள்ளோம். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்," என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறியதாவது:- ரயில், பேருந்து மற்றும் விமானப் பயணிகளுக்கு நேரம் வித்தியாசம் உள்ளது. விமானத்திலிருந்து இறங்கி லக்கேஜ் போன்றவற்றை அவர்கள் எடுத்துக் கொண்டு கால்டாக்சி அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு வருவதற்கு ஆகும் நேரம் ஆகியவற்றை ஆய்வு செய்யாமல் நேரம் தரப்படுவதால் பயணிகள், கால்டாக்சி ஒட்டுநனர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சொந்த வாகனம் வைத்திருப்போரும் கூட இந்த நேரம் முறை காரணமாக மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். விமான நிலைய நிர்வாகம் இதனைச் சரி செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

இது குறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குநர் ஆர். மகாலிங்கம் கூறுகையில், "தனியார் கால் டாக்சிகள் பயணிகளை ஏற்றி;rசெல்ல இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம். சொந்த வாகனம் வைத்திருப்பார் உள்ளே வரை செல்லலாம். போக்குவரத்து நெருக்கடி போன்ற காரணத்தால் நேரம் வகுக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்குப் பாதிப்பில்லை," என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...