கோவை மத்திய சிறையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: கைதி மாரடைப்பால் மரணம்

கோவை: கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக மேலும் ஒரு கைதி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக மேலும் ஒரு கைதி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு, சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள், தண்டனை காலம் முடிவதற்குள், சிறையிலேயே மரணம் அடைந்து வரும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 5-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர். சிறையில் மருத்துவமனை வசதிகள் போதுமான அளவில் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று காலை மேலும் ஒரு கைதி மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார். மடத்துக்குளம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து கடந்த 2010-ம் ஆண்டு மடத்துக்குளம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த அவர், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

சிறைச்சாலையில் ஒருவருக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டால் போதுமான மருத்துவர் இல்லாததால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பாதுகாப்புக்கு காவலர்கள் வந்த பின்புதான் மாரடைப்பு ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல முடியும். ஆனால், சிறைத்துறையின் இந்த காலதாமதத்தால் தான் இறப்புகள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...