திருப்பூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருப்பூர்: போயம்பாளையத்தில் சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்: போயம்பாளையத்தில் சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால், தடையை மீறி ஒருசில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் அவினாசி ஸ்ரீனிவாசா நகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1,20,000 மதிப்புள்ள புகையிலை பொருட்களை திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது, அதை பதுக்கி வைத்திருந்தவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கணபதி நகரில் உள்ள ஒரு குடோனிலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. 



இதையடுத்து, நேற்று இரவு திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் மாநகர அலுவலர்கள் முருகேசன், தங்கவேல் ஆகியோர் போயம்பாளையம் பகுதியில் உள்ள அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதுதொடர்பாக, சுரேஷ் (வயது 22) என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த குடோனில் புகையிலை பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்து, பின்னர் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சில்லறை முறையில் விற்பனை செய்வது தெரிய வந்தது. 



பின்னர், அங்கிருந்து சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த குடோனுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூரில் பல லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...