நீதிமன்றத்திற்குள் புகுந்து கைது நடவடிக்கை: சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

திருப்பூர்: திருப்பூரில் நீதிமன்றத்திற்குள் புகுந்து குற்றவாளியை கைது செய்த சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் நீதிமன்றத்திற்குள் புகுந்து குற்றவாளியை கைது செய்த சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி சிட்டிபாபு என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் என்பவர் திருப்பூர் நீதிமன்றத்திற்கு சரணடைய வந்தார். ஆனால், இது குறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் முனிஸ்வரன், சட்ட விதிகளை மீறி நீதிமன்றத்திற்குள் புகுந்து சந்தோஷை கைது செய்தார். 

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு திருப்பூர் வழக்கறிஞர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நீதிமன்ற பணிகளும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 

இது தொடர்பாக திருப்பூர் வழக்கறிஞர் சங்கத்தினர், ஆய்வாளர் முனிஸ்வரன் நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை விசாரித்த தலைமை நீதிபதி, சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனிஸ்வரன் செயலுக்கு அரசு வழக்கறிஞரை அழைத்து கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்ற கண்டனத்துக்குள்ளான ஆய்வாளர் முனிஸ்வரன் தெற்கு மண்டல காவல்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், உடனடியாக தெற்கு மண்டல காவல் துறையில் பணிக்கு சேரும்படி காவல் துறை தலைமையகத்தில் இருந்து ஆய்வாளர் முனிஸ்வரனுக்கு உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...