டிராவல்ஸ் கார்களை திருடி அடமானம் வைத்தவரை போலீசில் ஒப்படைத்த உரிமையாளர்கள்

கோவை: கோவையில் வாடகைக்கு வாகனம் எடுத்துக் கொள்வதாக கூறி 10-க்கும் மேற்பட்ட கார்களை எடுத்துச் சென்று அடமானம் வைத்த கும்பலைச் சேர்ந்த நபரை டிராவல்ஸ் உரிமையாளர்கள் பிடித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கோவை: கோவையில் வாடகைக்கு வாகனம் எடுத்துக் கொள்வதாக கூறி 10-க்கும் மேற்பட்ட கார்களை எடுத்துச் சென்று அடமானம் வைத்த கும்பலைச் சேர்ந்த நபரை டிராவல்ஸ் உரிமையாளர்கள் பிடித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

குனியமுத்தூர் பகுதியை சார்ந்த பாலசந்தர் என்பவர் தனது டிராவல்ஸ் நண்பர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், தன்னிடம் சீலியூரை சேர்ந்த அஜீத் என்பவர் 6 கார்களை வாடகைக்கு எடுத்து ஏமாற்றியதாகவும், மேலும், தனது நண்பர்கள் சிலரிடமும் கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்று பல டிராவல்ஸ் நிறுவனங்களில் கார்களை எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளதாக வாடகை கார் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், அஜித் சொல்லியதாகக் கூறி கார்களை எடுத்துச் சென்ற சந்துரு என்பவரை பாதிக்கப்பட்டவர்கள் தேடிப் பிடித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 



மேலும், கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்து மோசடி செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...