கோவை மாநகர காவல்துறை சார்பில் ரத்த தானம் முகாம்

கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர் பயிற்சிப்பள்ளியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தானம் முகாமில் ஏராளமான போலீசார் ரத்தக் கொடையளித்தனர்.

கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர் பயிற்சிப்பள்ளியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தானம் முகாமில் ஏராளமான போலீசார் ரத்தக் கொடையளித்தனர். 

தமிழக காவல்துறை சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ரத்ததானம் செய்துள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் ரத்ததான முகாம், காவலர் மருத்துவமனை முகாமில் நடைபெற்றது. இந்த முகாமை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 



இந்த சிறப்பு ரத்த தானம் முகாமில், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் தர்மராஜ் (தலைமையிடம் பொறுப்பு), பெருமாள் (குற்றம்), சுஜித் குமார் (போக்குவரத்து) போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில், கோவை மாநகர ஆயுதப் படையைச் சேர்ந்த 50 காவலர்கள், கோவை காவலர் பயிற்சிப்பள்ளியின் பயிற்சி பெண் காவலர்கள் 50 பேர் உள்பட மொத்தம் 197 பேர் ரத்த தானம் செய்தனர். இந்த ரத்த தானம் முகாமில் காவல்துறையில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள் என பலர் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். அதேபோல, கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தார்.



இதேபோல, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல்துறை சார்பில் ரத்த தானம் முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் உட்கோட்ட காவல்நிலையத்தை சேர்ந்த மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கருமத்தம்பட்டி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட காவலர்கள் ரத்த தானம் செய்தனர். இந்த இரத்தத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் அளிக்கப்பட்டதாகத் துணை கண்காணிப்பாளர் மணி தெரிவித்தார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...