சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கோவை: குடிநீர் வினியோகம் செய்ய சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


கோவை: குடிநீர் வினியோகம் செய்ய சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.



கோவை மாநகராட்சியில் தண்ணீர் வழங்கும் உரிமத்தை தனியார் நிறுவனமாக சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது அக்கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் பேசுகையில், "மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான தனியார் பிரென்சு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. எனவே அந்நிறுவனத்துடனான 30 பக்க ஒப்பந்தத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

குடிநீரை வழங்க வேண்டிய அரசின் கடமை என்பதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். யார் அரசை கேள்வி கேட்டாலும் கைது என்ற நடவடிக்கை, தமிழகம் மற்றும் இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை போல் உள்ளது." என்றார். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாநகராட்சி மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பப்பட்டது. தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...