ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் பேச இதுநேரமல்ல..! ஜக்கிவாசுதேவிற்கு நடிகர் சித்தார்த் பதில்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கிவாசுதேவிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கிவாசுதேவிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களில் 11 பேர் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பலர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கிவாசுதேவ், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது :- காப்பரை உருவாக்குவதில் நான் கைதேர்ந்தவன் அல்ல. ஆனால், இந்தியாவில் காப்பர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் நமது நாட்டில் இதனை தயாரிப்பதில்லை. சீனாவில் இருந்தே இறக்குமதி செய்கிறோம். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல், சுற்றுச்சூழல் மாசுபடாதவாறு, சட்டவிதிகளுக்குட்பட்டு ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகப் பெரிய தொழில்களை அழிப்பது பொருளாதார தற்கொலையாகும், இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். 

ஜக்கிவாசுதேவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சித்தார்த் தனது பங்கிற்கு அவரது கருத்திற்கு பதிலளித்துள்ளார். 



டுவிட்டரில் நடிகர் சித்தார்த் விடுத்துள்ள பதிவில், 'முதலமைச்சர் அலுவலகர் ஒரு வெட்கக்கேடு. பிரதமர் அலுவலகம் யோகாவைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசுவதில்லை. காப்பர் உருக்குவதில் பலன்களைப் பற்றி பேச இது சிறந்த நேரம் இல்லை சத்குரு. மக்கள் போலீசாரால் கொல்லப்படுகின்றனர். கொலை பற்றி பேசுங்கள்,' எனக் கூறியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...